Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி

By: Karunakaran Sun, 08 Nov 2020 09:59:43 AM

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார். அதேபோல், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சி சார்பில் மைக் பென்சும், ஜனநாயாக கட்சி சார்பில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர்.

அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் ஆக முடியும். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார். இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் எண்ணிக்கை தற்போது நிறைவு பெற்றது.

tamil nadu,kamala harris,us,vice presidential election ,தமிழ்நாடு, கமலா ஹாரிஸ், அமெரிக்கா, துணை ஜனாதிபதி தேர்தல்

பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார். இதனால் பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அமெரிக்க அதிபராக பைடன் விரைவில் பதவியேற்க உள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கமலா ஹாரிஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஜோ பைடனுடன் பேசிய கமலா ஹாரிஸ், நாம் சாதித்து விட்டோம்... நாம் சாதித்து விட்டோம் ஜோ.. அமெரிக்காவின் அடுத்த அதிபர் நீங்கள் தான்.. என்றார்.

Tags :
|