- வீடு›
- செய்திகள்›
- இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழைபெய்யக்கூடும்
இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழைபெய்யக்கூடும்
By: vaithegi Mon, 12 June 2023 10:27:13 AM
சென்னை: மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் வருகிற 14 -ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
இதனை அடுத்து அதிகபட்ச வெப்பநிலையாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 38 டிகிரி முதல் 48 டிகிரி செல்சியஸ் செலவில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.