Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் வருகிற 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்காலில் மழை பெய்யக்கூடும்

நாளை முதல் வருகிற 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்காலில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Tue, 20 June 2023 09:58:38 AM

நாளை முதல் வருகிற 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்காலில் மழை பெய்யக்கூடும்

சென்னை: அடுத்த 4 நாட்களுக்கு மழை .... தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை என மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ,விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது.

karaikal,puducherry,tamil nadu , தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

இதனை அடுத்து நாளை முதல் வருகிற 23ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகம் மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags :