தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்
By: vaithegi Thu, 09 Mar 2023 6:10:51 PM
சென்னை: தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி கொண்டிருப்பதால் பெரும்பான்மையான மாவட்டங்களில் தற்போது வெயில் கொளுத்த ஆரம்பமாகிவிட்டது.
இந்நிலையில் இன்று முதல் 13-ம் தேதி வரையிலான வானிலை நிலவரம் பற்றிய அறிவிக்கையை சென்னை வானிலை மையம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இதில் தெரிவித்துள்ளதாவது, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, வருகிற 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குறைந்தபட்சமாக 21-22 டிகிரி முதல் அதிகபட்சமாக 32-33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.