Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கத்திக்குத்தில் தமிழ் இளைஞர் பலி... ஒன்ராறியோ போலீசார் விசாரணை

கத்திக்குத்தில் தமிழ் இளைஞர் பலி... ஒன்ராறியோ போலீசார் விசாரணை

By: Nagaraj Tue, 18 Oct 2022 09:52:45 AM

கத்திக்குத்தில் தமிழ் இளைஞர் பலி... ஒன்ராறியோ போலீசார் விசாரணை

கனடா: கத்திக்குத்தில் தமிழ் இளைஞர் பலி... கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் பிராந்தியப் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இடம்பெற்றுள்ளதாக டார்ஹாம் போலீஸ் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் இவர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்றும் தமிழ்த் தேசிய விளையாட்டு அணிகளில் துடிப்புடன் பங்குபற்றி வந்தவர் எனவும் கூறப்படுகின்றது. அஜாக்ஸ் (Ajax) என்ற இடத்தில் உள்ள கிங்ஸ்கஸ்ரில் அருந்தகத்துக்கு (King’s Castle Bar and Grill) வெளியே வாகனத் தரிப்பிடத்தில் இருவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு காரில் ஏறித் தப்பி சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.

investigation,toronto,hospital,contact,police ,விசாரணை, ரொறன்ரோ, மருத்துவமனை, தொடர்பு, போலீசார்

கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரொறன்ரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர் அங்கு பின்னர் உயிரிழந்தார். அவரை வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற நபரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.


அதேசமயம் சம்பவம் இடம்பெற்ற அதேநேரத்தில் அருந்தகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் சாரதி ஒருவர் தனது காரை வேகமாகச் செலுத்தி நபர் ஒருவரை மோதிப் படுகாயப்படுத்தியவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டார்ஹாம் பிராந்தியப் போலீஸ் தெரிவித்துள்ளது.

Tags :