Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெற்பயிர்களை இந்த தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் ... தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தெரிவிப்பு

நெற்பயிர்களை இந்த தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் ... தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தெரிவிப்பு

By: vaithegi Sat, 05 Nov 2022 4:42:24 PM

நெற்பயிர்களை இந்த  தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் ...  தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தெரிவிப்பு

சென்னை: நெற்பயிர்களை காப்பீடு செய்துகொள்ள வேண்டும் .... இது பற்றி வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் முதலமைச்சர் 2022-23ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இதனை அடுத்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 இலட்சம் ஏக்கர் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

rice crop,insurance ,நெற்பயிர்,காப்பீடு

இதைத்தொடர்ந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15. கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த மாவட்ட நெல் விவசாயிகள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், pmfby.gov.in என்ற இணையதளத்தில் “விவசாயிகள் கார்னர்" எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :