தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 19,061 பேர் சிகிச்சை
By: Monisha Fri, 06 Nov 2020 11:50:17 AM
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று புதிதாக 2 ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 36 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 19 ஆயிரத்து 61 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 413 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 6 ஆயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 272 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 50
செங்கல்பட்டு - 1,052
சென்னை - 6,080
கோவை - 1,009
கடலூர் - 220
தர்மபுரி - 188
திண்டுக்கல் - 105
ஈரோடு - 799
கள்ளக்குறிச்சி - 153
காஞ்சிபுரம் - 484
கன்னியாகுமரி - 257
கரூர் - 257
கிருஷ்ணகிரி - 290
மதுரை - 423
நாகை - 304
நாமக்கல் - 421
நீலகிரி - 279
பெரம்பலூர் - 37
புதுக்கோட்டை - 213
ராமநாதபுரம் - 68
ராணிப்பேட்டை - 258
சேலம் - 1,224
சிவகங்கை - 126
தென்காசி - 62
தஞ்சாவூர் - 261
தேனி - 82
திருப்பத்தூர் - 152
திருவள்ளூர் - 941
திருவண்ணாமலை - 298
திருவாரூர் - 291
தூத்துக்குடி - 402
திருநெல்வேலி - 179
திருப்பூர் - 1,032
திருச்சி - 332
வேலூர் - 374
விழுப்புரம் - 264
விருதுநகர் - 92
விமானநிலைய கண்காணிப்பு - 2