அயர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய மந்திரி டாரா காலரி ராஜினாமா
By: Karunakaran Sun, 23 Aug 2020 3:13:55 PM
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி வருகிறது.
அதன்படி, பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 15 பேர் மட்டுமே கூட வேண்டும் என்கிற புதிய கட்டுப்பாட்டை அந்த நாட்டு அரசு விதித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு தலைநகர் டப்ளினில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இரவு விருந்தில் அந்த நாட்டின் விவசாயத் துறை மந்திரி டாரா காலரி கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசின் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மந்திரி டாரா காலரி விருந்தில் கலந்து கொண்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் மந்திரி டாரா காலரி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவரது அவரது ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
இதுகுறித்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் கூறுகையில், நாடு முழுவதுமுள்ள மக்கள் கொரோனா விதிமுறைகளுக்கு இணங்க தங்கள் குடும்ப வாழ்க்கையிலும், தங்கள் தொழில்களிலும் மிகவும் கடினமான தியாகங்களை செய்துள்ளனர். இப்படியான சூழலில் மந்திரி அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறானது என்று கூறினார்.