Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 3 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 3 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

By: vaithegi Tue, 01 Aug 2023 1:25:49 PM

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 3 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாமக்கல் : கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்கள் தமிழக அரசின் சார்பில் மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

namakkal,tasmac shop ,நாமக்கல் , டாஸ்மாக் கடை

எனவே திருவிழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதற்காக இன்று முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரைக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அனைத்து டாஸ்மாக் நிறுவனத்திற்கும் மாவட்ட ஆட்சியர் டாக்டர். உமா உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து இந்த அறிவிப்பினையும் மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :