Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெளிவான விசாரணைக்கு பிறகே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன... அமைச்சர் தகவல்

தெளிவான விசாரணைக்கு பிறகே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன... அமைச்சர் தகவல்

By: Nagaraj Sun, 25 June 2023 10:45:49 PM

தெளிவான விசாரணைக்கு பிறகே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன... அமைச்சர் தகவல்

ஈரோடு: தெளிவான விசாரணைக்கு பிறகே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஏதேனும் கடைகளை மூட சொன்னால் அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- “சமீபத்தில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம்.

business,minister,muthuswamy,purpose,tasmac, ,அமைச்சர், டாஸ்மாக், நோக்கம், முத்துசாமி, வியாபாரம்

தெளிவான விசாரணைக்கு பிறகே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஏதேனும் கடைகளை மூட சொன்னால் அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

அதே போல், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் போது, சட்டவிரோதமாக மது அருந்துபவர்கள் வேறு இடங்களுக்கு செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இதை நாம் பக்குவமாக கையாள வேண்டும். தற்போதுள்ள பிரச்னைகளை தீர்த்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறோம்,” என்றார் அமைச்சர் முத்துசாமி.

Tags :
|