Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரோட்டில் வரும் 25 முதல் 27-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்

ஈரோட்டில் வரும் 25 முதல் 27-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்

By: vaithegi Sat, 18 Feb 2023 10:20:55 AM

ஈரோட்டில் வரும் 25 முதல் 27-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்

ஈரோடு : வரும் 25 முதல் 27-ம் தேதி வரை தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது .... ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.

இதேபோன்று தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இதையடுத்து இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

tasmac shops,erode , டாஸ்மாக் கடைகள்,ஈரோடு


இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அரசு உத்தரவின்படி வருகிற 25-ந்தேதி காலை 10 மணி முதல் வருகிற 27-ம் தேதி வரை, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து விதமான டாஸ்டாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும். அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினங்களில் மதுவிற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துவுள்ளார்.

Tags :