Advertisement

ஜாமீன் கையெழுத்திட காவல் நிலையம் வந்த டிடிஎப். வாசன்

By: Nagaraj Sun, 26 Nov 2023 10:34:25 PM

ஜாமீன் கையெழுத்திட காவல் நிலையம் வந்த டிடிஎப். வாசன்

காஞ்சிபுரம்: காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்... அஜாக்கிரதையாக டூவீலரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் 21-வது நாளாக டி.டி.எஃப்.வாசன் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட்டார்.

கடைசி நாளில் கையெழுத்திட வந்த வாசனை காண்பதற்காக வந்த சில ரசிகர்கள் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தியதால் அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.

dtf wasan,adventure travel,farmer,signature,police station ,டிடிஎப் வாசன், சாகச பயணம், விவசாயி, கையெழுத்து, காவல் நிலையம்

அப்போது, சாலையில் நிறுத்தியிருந்த காரின் பின்புறம் டூவீலர் ஒன்று மோதியது. பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாகச பயணங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய விவசாயி ஒருவரிடம் அங்கிருந்த இளைஞர் வாசனுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஜாமீன் கையெழுத்திட வரும் போது உணவு சாப்பிட்ட சாலையோர கடை நடத்தும் பெண்ணுக்கு வாசன் நிதி உதவி அளித்தார்.

Tags :
|