- வீடு›
- செய்திகள்›
- சென்னையில் கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து
சென்னையில் கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து
By: vaithegi Mon, 15 Aug 2022 7:58:09 PM
சென்னை: இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் கவர்னர்
மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர்
விருந்துக்கு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் முதல்
அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இதை அடுத்து அதில்
சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு,
பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் என
உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தன்,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் முக்கிய பிரமுகர்களும் பலர்
கலந்துகொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து திமுக வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர். கவர்னரின் தேநீர் விருந்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் கலந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை.