Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யுபிஐ கியூஆர் கோட்டுடன் டீக்கடை... வைரலாகும் ஆனந்த் மகிந்திரா புகைப்படம்

யுபிஐ கியூஆர் கோட்டுடன் டீக்கடை... வைரலாகும் ஆனந்த் மகிந்திரா புகைப்படம்

By: Nagaraj Mon, 07 Nov 2022 11:49:19 AM

யுபிஐ கியூஆர் கோட்டுடன் டீக்கடை... வைரலாகும் ஆனந்த் மகிந்திரா புகைப்படம்

புதுடில்லி: உத்தரகாண்டின் மலைக்கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் யுபிஐ கியூஆர் கோட் அட்டை வைக்கப்பட்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து ‘இந்தியாவின் கடைசி டீக்கடை’ என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதை தனது புகைப்படத்தில் தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார்.

பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா அவ்வப்போது சுவாரசியம் மிக்க தகவல்களையும் வியக்கத்தக்க செயல்களையும் தனது டுவிட்டரில் பகிர்ந்து பாராட்டி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று விட்டதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு நிகழ்வை சுட்டிக்காடி ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார்.

famous industrialist,posted,transactions,uttarakhand ,ஆனந்த் மகிந்திரா, கடைக்கோடி, கிராமம், பாராட்டி டுவிட்

உத்தரகாண்டின் மலைக்கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் யுபிஐ கியூஆர் கோர்ட்டு அட்டை வைக்கப்பட்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து ‘இந்தியாவின் கடைசி டீக்கடை’ என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பின் வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார். “ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். இந்தப் புகைப்படம் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைக் கட்டமைப்பின் வளர்ச்சியையும் பாய்ச்சலையும் காட்டுகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
|