Advertisement

டெல்லியில் கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள்

By: vaithegi Tue, 27 Dec 2022 3:09:26 PM

டெல்லியில் கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள்

டெல்லி : தடுப்பு பணியில் ஆசிரியர்கள் ..... இந்தியாவில் தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் BF.7 என்ற வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசு நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை மிக தீவிரப்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும், தகுந்த பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

teachers,corona,delhi ,ஆசிரியர்கள்    ,கொரோனா , டெல்லி

இதையடுத்து இந்த நிலையில் அனைத்து கல்வி வாரியங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு தற்போது கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு தினங்களை ஒட்டியும், குளிர் காலம் காரணமாகவும் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்லி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 15 வரை டெல்லி விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
|