பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை
By: vaithegi Sun, 19 Nov 2023 1:42:54 PM
சென்னை: சட்டசபையில் வாக்குறுதி வழங்கிய படி பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என கோரிக்கை ... தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக கட்சியின் சார்பில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரையிலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசு இழுத்தடித்து கொண்டிருக்கிறது. மேலும், இப்பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.10,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அரசின் வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரத்திற்காக காத்து கொண்டிருக்கும் நிலையில் கூடிய விரைவில் அரசு அதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இது மட்டுமல்லாமல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்துவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் உடனடியாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.