Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இருந்து இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னையில் இருந்து இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

By: Monisha Mon, 12 Oct 2020 09:50:15 AM

சென்னையில் இருந்து இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னையில் இருந்து இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் - மதுரை (வண்டி எண்: 02613) இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரெயில், காலை 6 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தேஜஸ் சிறப்பு ரெயில் நாளை முதல் 6 மணிக்கு பதிலாக 6.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு மதுரை சென்றடையும். மேலும் அந்த ரெயில் திருச்சிக்கு காலை 10.30 மணிக்கும், கொடைக்கானல் ரோடுக்கு காலை 11.53 மணிக்கும் வந்தடையும்.

ஆனால் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து எழும்பூருக்கு வரும் தேஜஸ் சிறப்பு ரெயிலின் புறப்படும் நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :