Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கி அனுப்பிய தெலுங்கானா கவர்னர்

திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கி அனுப்பிய தெலுங்கானா கவர்னர்

By: Nagaraj Tue, 09 June 2020 9:14:48 PM

திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கி அனுப்பிய தெலுங்கானா கவர்னர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனுக்கு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும் தெலுங்கானா கவர்னருமான தமிழசை சவுந்தரராஜன் ரெம்டெசிவர் மருந்தை வாங்கி அனுப்பி உதவி உள்ளார்.

சேப்பாக்கம்-திருவெல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகன். இவருக்கு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே நீரிழிவு மற்றும் பல பிரச்னைகளால் அன்பழகன் அவதிப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் அவர் உடல் நிலை கவலைக்கிடமானது.

dmk mla,remediator drug,therapy,telangana governor ,திமுக எம்எல்ஏ, ரெம்டெசிவர் மருந்து, சிகிச்சை, தெலுங்கானா கவர்னர்

அதனால் கடந்த 3ம் தேதி முதல் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆக்சிஜன் செயற்கை சுவாச முறையிலேயே அளிக்கப்பட்டு வருகிறது. அன்பழகனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அதன் பிறகு அவரின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக பா.ஜ. முன்னாள் தலைவரும், தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் ஐதராபாத்திலிருந்து கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கி அனுப்பி இருக்கிறார். ரெம்டெசிவர் மருந்தினை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் போது குணமாகும் வேகம் 31 சதவீதம் அதிகமாவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ரெம்டெசிவர் மருந்தினையே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :