Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவலரின் கன்னத்தில் அறைந்த தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். கட்சி தலைவர் ஷர்மிளா கைது

காவலரின் கன்னத்தில் அறைந்த தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். கட்சி தலைவர் ஷர்மிளா கைது

By: Nagaraj Tue, 25 Apr 2023 6:39:04 PM

காவலரின் கன்னத்தில் அறைந்த தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். கட்சி தலைவர் ஷர்மிளா கைது

ஐதராபாத்: ஷர்மிளா கைது செய்யப்பட்டார்... ஐதராபாத்தில் காவலரின் கன்னத்தில் அறைந்த தெலுங்கானா ஒய். எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளர்.

தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணை நடத்தும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாக கூறி எதிர் கட்சிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு பணிகளுக்கான மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள் கசிந்த விவகாரம் தீவிரமாக பேசிவரும் ஒய். எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் சகோதரியும் ஒய்.எஸ்.ஷர்மிளா இந்த குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவின் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

police,argument,guard,slap,arrest,scenes ,போலீசார், வாக்குவாதம், காவலர், அறைந்தனர், கைது, காட்சிகள்

காரில் சென்ற அவரை காவலர்கள் மறித்து தடுத்து நிறுத்தினர். கோபம் அடைந்த ஷர்மிளா காவல் அதிகாரியை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த காவல் அதிகாரிகள் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தனது மகள் காவலில் வைக்கப்பட்ட செய்தியை அறிந்து அங்கு சென்ற முயன்ற தாய் விஜய்யம்மாவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் காவலர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். காவலர்களின் கன்னத்தில் தாயும், மகளும் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசும் பொருளாகியுள்ளன.

Tags :
|
|
|
|