பணய கைதிகள் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்... இஸ்ரேல் அறிவிப்பு
By: Nagaraj Thu, 26 Oct 2023 07:27:17 AM
இஸ்ரேல்: பணய கைதிகள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தகவல் தெரிவிக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ம் தேதி தொடங்கி 19 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் அப்பாவி மக்களும் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி அமைதியான வாழ்க்கை, குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் என்பதை விரும்பினால் மனித நேய நலன்களை செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் பணயக் கைதிகள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்தது பற்றி தகவல்கள் தெரிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான முயற்சியை நாங்கள் எடுப்போம். அதேபோன்று நிதி சார்ந்த பரிசையும் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் நம்பகத்தன்மைக்கு முழு உத்தரவாதத்தை நாங்கள் கொடுக்கிறோம் என இஸ்ரேல் ராணுவம் உறுதி அளித்துள்ளது. மேலும் தகவல் பகிர தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களையும் ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.