ஏர் இந்தியா விமானங்களுக்கு பயங்கரவாத மிரட்டல்... பாதுகாப்பு தீவிரம்
By: Nagaraj Fri, 10 Nov 2023 3:07:54 PM
புதுடில்லி: பாதுகாப்பு நடவடிக்கை... ஏர் இந்தியா விமானங்களுக்குத் தொடரும் பயங்கரவாத மிரட்டல்களால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி பயங்கரவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று பல்வேறு நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நவம்பர் 19ம் தேதிக்குப் பிறகு ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகளுக்கு சீக்கிய காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்துக்கு மிரட்டல் வந்ததையடுத்து டெல்லி மற்றும் பஞ்சாப் விமானநிலையங்களில் பாதுகாப்பும் சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags :
plane |
threat |
delhi |
punjab |
airport |