Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மொசாம்பிக்கில் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவன ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

மொசாம்பிக்கில் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவன ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

By: Karunakaran Tue, 07 July 2020 10:15:52 AM

மொசாம்பிக்கில் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவன ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் அல் ஷபாப் பயங்கரவாத இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பொதுமக்கள், போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து அல் ஷபாப் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கபோ டெல்ஹோடா மாகாணத்தில் அயல்நாட்டை சேர்ந்த தனியார் எண்ணெய் நிறுவனம் தொடங்கியுள்ளது. பல கோடி ரூபாய் முதலீட்டில் இங்கு இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொழிற்சாலைகளை அமைக்கும் பணியில் நூற்றூக்கணக்கானவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

mozambique,natural gas,extraction plant,terrorists attack ,மொசாம்பிக், இயற்கை எரிவாயு, பிரித்தெடுக்கும் ஆலை, பயங்கரவாதிகள் தாக்குதல்

இந்நிலையில் இயற்கை எரிவாயு எடுக்கும் இந்த தொழிற்சாலைகளை அமைக்கும் கட்டிடத்தில் ஊழியராக வேலை செய்தவர்கள் நேற்று தங்கள் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். வீட்டிற்கு வேனில் சென்று கொண்டிருந்தவர் மொகிம்பா டா பர்யா என்ற பகுதியை கடந்தபோது, அவர்களை பயங்கரவாதிகள் தாக்கினர்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், வாகனத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். மேலும் காயமடைந்தவர்களில் 3 பேரை பிணைக்கைதிகளாகபயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :