Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘வாகிர்’ நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடக்கம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘வாகிர்’ நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடக்கம்

By: Karunakaran Fri, 13 Nov 2020 08:27:47 AM

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘வாகிர்’ நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடக்கம்

இந்திய கடற்படைக்கு ஸ்கார்ப்பீன் வகையை சேர்ந்த 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. கடற்படையின் ‘திட்டம்-75’-ன் கீழ் கட்டப்பட்டு வரும் இந்த கப்பல்களை பிரான்ஸ் கடற்பாதுகாப்பு மற்றும் எரிசக்தி நிறுவனமான டி.சி.என்.எஸ் வடிவமைத்து, மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 3-வது கப்பலான ‘கரஞ்ச்’ இறுதிக்கட்ட கடற்சோதனையில் உள்ளது. 4-வது கப்பலான ‘வேலா’ தனது கடல் சோதனையை தொடங்கி இருக்கிறது. இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ‘வாகிரின்’ தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து சோதனை ஓட்ட பணிகளுக்கான நடவடிக்கைகள் நடந்து வந்தன. இந்த கப்பலும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ‘வாகிர்’ நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டத்தை, மந்திரியின் மனைவி விஜயா காணொலி காட்சி மூலமே தொடங்கி வைத்தார்.

test run,wagir,submarine,india ,சோதனை ஓட்டம், வாகீர், நீர்மூழ்கி கப்பல், இந்தியா

இந்த ஸ்கார்ப்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்களால் தரை இலக்குகள் எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, உளவுத்தகவல் சேகரிப்பு, பிராந்திய கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆழ்கடல் மணல் பரப்பில் சிறப்பாக வேட்டையாடும் மீனான ‘வாகிரின்’ பெயரை இந்த நீர்மூழ்கிக்கும் வைக்கப்பட்டு உள்ளது. வாகிர் நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியிருப்பதன் மூலம், நீர்மூழ்கி கப்பல் கட்டும் திறனில் இந்தியாவின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக எம்.டி.எல். குறிப்பிட்டு உள்ளது.

கடந்த 1992-94-ம் ஆண்டு காலகட்டத்தில் எம்.டி.எல். கட்டிய 2 நீர்மூழ்கி கப்பல்கள் இன்னும் படையில் இருப்பதன் மூலம், எம்.டி.எல்.லின் திறன் நிரூபணமாகி இருப்பதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்கார்ப்பீன் வரிசை நீர்மூழ்கி கப்பல்களில் 6-வது கப்பலான வக்‌ஷீரும், சோதனை ஓட்டத்துக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|