சீனாவை நம்ப முடியாது என்று பிரிட்டன் அமைச்சர் எச்சரிக்கை
By: Nagaraj Wed, 08 July 2020 5:32:19 PM
சீனாவை நம்ப முடியாது என பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் (Dominic Raab ) எச்சரித்துள்ளார்.
ஹாங்காங்கில் கைது செய்யப்படுவோரை சீனா அழைத்து வந்து விசாரணை நடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்டத்தை அந்நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் மனித உரிமை மீறல்கள், ஊழலில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் (Magnitsky-style sanctions law) சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து பேசிய டொமினிக் ராப், ஹாங்காங் விவகாரத்தில் பிரிட்டன்
விதித்த நிபந்தனைகளை சீனா ஏற்றுக் கொண்டதாகவும், இது நம்பிக்கை
சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு பிறகு,
சீனா சர்வதேச நிபந்தனைகளுக்கு கட்டுப்படுமா என பல்வேறு நாடுகளும் கேள்வி
கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்டத்தின் கீழ் 25 ரஷ்ய
நாட்டினர், 20 சவூதி நாட்டினர், 2 மியான்மர் ராணுவ ஜெனரல்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் சீனாவை
நம்ப முடியாது. சர்வதேச நிபந்தனைக்கு கட்டுப்படுமா என்றும் எச்சரிக்கை
விடுத்துள்ளார். ஹாங்காங்கில் சீனாவின் புதிய சட்டத்தை எதிர்த்து
போராட்டங்கள் வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.