Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது!

12-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது!

By: Monisha Tue, 26 May 2020 5:24:18 PM

12-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது!

12-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது திருத்தும் பணி மீண்டும் நாளை தொடங்குகிறது. 48 லட்சம் விடைத்தாள்கள் 200 மையங்களில் நாளை முதல் நடைபெறுகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி இங்கு நடைபெறவில்லை.

இங்குள்ள விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்துள்ளது.

கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி விட்டு பணி செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் தலைமை கண்காணிப்பாளர் 6 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள்.

12th grade examination,answer sheet,exam paper correction,200 centers,education department ,12-ம் வகுப்பு தேர்வு,விடைத்தாள்,திருத்தும் பணி,200 மையங்கள்,கல்வித்துறை

விடைத்தாள் திருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கும். தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்களுக்கான விடைத்தாள்கள் காலையில் 15, மாலையில் 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். மற்ற முக்கிய பாடங்கள் காலையில் 10, மாலையில் 10 விடைத்தாள்கள் திருத்தம் செய்வார்கள்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறும்போது, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 60 ஆயிரம் முகக்கவசங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கிருமி நாசினியை கைகளில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும். மையங்களில் ஆசிரியர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்றார்.

Tags :