Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோபாவுக்கு அடியில் இருந்த 16 அடி நீள ராஜநாகம் உயிருடன் மீட்பு

சோபாவுக்கு அடியில் இருந்த 16 அடி நீள ராஜநாகம் உயிருடன் மீட்பு

By: Nagaraj Tue, 18 Aug 2020 7:28:59 PM

சோபாவுக்கு அடியில் இருந்த 16 அடி நீள ராஜநாகம் உயிருடன் மீட்பு

சோபாவுக்கு அடியில் இருந்த ராஜ நாகம் உயிருடன் பிடிக்கப்பட்டது.

கேரளா மாநிலத்தில் ஒரு வீட்டில் உள்ள அறையில் இருந்த சோஃபாவுக்கு அடியில் இருந்து 16 அடி நீளம் கொண்ட கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு என்னும் கிராமத்தில் வசித்துவருகிறார் மணீந்திரன். இவரது வீடு மலை அடிவாரத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் அறையில் இருந்த சோஃபாவுக்கு அருகில் ஏதோ வித்தியாசமான ஒரு உருவம் இருப்பதை பார்த்த மணீந்திரன் அருகில் சென்று டார்ச் அடித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அது ராஜநாகம் என்பதுதான்.

கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பை வீட்டிற்குள் பார்த்ததும் மணீந்திரன் உடம்பெல்லாம் நடுங்கி போய் உள்ளது. உடனே இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

rajanagam,recovered alive,16 feet long,forest ,ராஜநாகம், உயிருடன் மீட்பு, 16 அடி நீளம், வனப்பகுதி

வனத்துறையினர் உடனே வாவா சுரேஷ் என்ற பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ராஜ நாக பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவரான வாவா சுரேஷ் மணீந்திரன் வீட்டிற்கு விரைந்து சென்று அங்கிருந்த 16 அடி நீள ராஜநாக பாம்பை பிடித்துள்ளார். பின்னர் பாம்பை ஒரு பெரிய பைக்குள் போட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளார் வாவா சுரேஷ். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :