20வது திருத்தம் ஆபத்தானது; முன்னாள் ஜனாதிபதி கருத்து
By: Nagaraj Sun, 27 Sept 2020 11:04:50 AM
ஆபத்தானது... 20 ஆவது திருத்தம் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்கவின் 61 ஆவது நினைவு தின நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஹொரகொல்லவிலுள்ள பண்டாரநாயக்கவின் நினைவிடத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.