மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடக்கம்
By: vaithegi Mon, 21 Aug 2023 10:00:16 AM
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு ... தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதனை அடுத்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாகவும், பொது பிரிவினருக்கு இணைவழியிலும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது.
அதன்படி இன்று காலை 10 மணி முதல் நாளை மறுதினம் மாலை ஐந்து மணி வரை இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் அடுத்த மாதம் மூன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணைகளை இணையதளங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.