Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேலில் கொரோனா நோய்த்தொற்றின் 2-வது அலை: பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது

இஸ்ரேலில் கொரோனா நோய்த்தொற்றின் 2-வது அலை: பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது

By: Monisha Fri, 05 June 2020 11:29:33 AM

இஸ்ரேலில் கொரோனா நோய்த்தொற்றின் 2-வது அலை: பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது

இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்ததையடுத்து, சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி உள்ளது. இது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய நோய்த்தொற்று காரணமாக திறக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது.

இதற்கிடையே, இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினரான சமி அபு ஷாகாதேவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாராளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. நேற்று நடைபெறுவதாக இருந்த பாராளுமன்ற குழு கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

israel,coronavirus,mp,schools,parliamentary committee meetings ,இஸ்ரேல்,கொரோனா வைரஸ்,பாராளுமன்ற உறுப்பினர்,பள்ளிகள்,பாராளுமன்ற குழு கூட்டங்கள்

அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டுமே பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள், ஊழியர்கள் வரவேண்டும் என்றும், மற்றவர்கள் வீடுகளில் இருந்தபடியே பணிகளை கவனிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் நாட்டில் இதுவரை 17 ஆயிரத்து 343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|