Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ர‌ஷிய தடுப்பூசியின் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை தொடங்கியது

ர‌ஷிய தடுப்பூசியின் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை தொடங்கியது

By: Karunakaran Thu, 10 Sept 2020 09:31:22 AM

ர‌ஷிய தடுப்பூசியின் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை தொடங்கியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில், உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ர‌ஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மாதம் 11-ந் தேதி அறிவித்து உலகையே அதிர வைத்தார். ‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகிற இந்த தடுப்பூசியின் முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், பதிவு செய்யப்பட்டது.

final clinical trial,russia,corona vaccine,testing ,இறுதி மருத்துவ சோதனை, ரஷ்யா, கொரோனா தடுப்பூசி, சோதனை

தற்போது 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று தொடங்கியது. இதனை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முரா‌‌ஷ்கோ அறிவித்துள்ளார். ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் செயல்திறன், இந்த மருத்துவ பரிசோதனையில் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படும் என மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஏற்கனவே ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|