Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க களம் இறங்கிய விமானப்படை

கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க களம் இறங்கிய விமானப்படை

By: Nagaraj Wed, 26 Aug 2020 5:46:10 PM

கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க களம் இறங்கிய விமானப்படை

காட்டுத்தீயை அணைக்க களம் இறங்கி உள்ளது விமானப்படை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயால் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் பாழ்பட்டுப் போனது. இதையடுத்து நெருப்பை அணைக்கவும், கட்டுப்படுத்தவும் தீயணைப்பு வீரர்களுடன் ராணுவத்தினர் மற்றும் விமானப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் கடும் வெப்பம் மற்றும் தொடர்ந்து மின்னல் தாக்கியதால் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நெருப்பை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன் ஹெலிகாப்டர்களும், விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

air force,wildfire,california,firefighters ,விமானப்படை, காட்டுத்தீ, கலிபோர்னியா, தீயணைப்பு வீரர்கள்

கலிபோர்னியா வரலாற்றில் இரண்டாவது, 3வது பெரிய நெருப்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. நெருப்பின் காரணமாக சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் அவர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் வரை 12 லட்சம் ஏக்கர் நிலம் நெருப்பால் பாழ்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் நாப்பா, சோனோமா உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 3 லட்சத்து 40 ஏக்கர் நிலம் நெருப்பால் பொசுங்கிப் போனது.

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கவும், கட்டுப்படுத்தவும் தீயணைப்பு வீரர்களுடன் ராணுவத்தினர் மற்றும் விமானப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் நெருப்பு பற்றிய பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வளர்ப்பு விலங்குகளுடன் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நெருப்பு வளையத்திற்குள் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Tags :