Advertisement

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது

By: Nagaraj Wed, 05 Oct 2022 11:53:59 AM

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,961 கன அடியாக குறைந்துள்ளது.


அணையின் நீர் மட்டம் 118.71 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 91.42 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மூடப்பட்டது.

 ,மேட்டூர், நீர்வரத்து, குறைந்தது, கபினி அணை, கர்நாடகா, நீர்மட்டம்

அணையில் இருந்து உபரி நீர் 2,000 கன அடி 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வந்த நிலையில் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் மூடப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 15,900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 123.56 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 47.73 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,079 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,877 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 63.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 18.60 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 2,083 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 1,550 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags :