Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கலாம்

தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கலாம்

By: Nagaraj Fri, 14 Aug 2020 4:05:30 PM

தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கலாம்

கர்நாடக அணைகள் நிரம்புகின்றன... கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள நான்கு அணைகளும் நிரம்பியுள்ளதால் தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கபினி அணை முழுவதும் நிரம்பிய நிலையில் நீர்வரத்து நொடிக்கு 22 ஆயிரத்து 912 அடியாகவும், வெளியேற்றம் நொடிக்கு 24 ஆயிரத்து 63 கன அடியாகவும் இருந்தது.

farmers,cauvery watershed,happiness,karnataka ,விவசாயிகள், காவிரி நீர்ப்பிடிப்பு, மகிழ்ச்சி, கர்நாடகா

கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும் முழுக் கொள்ளளவான 124 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரத்து 27 கன அடியாகவும், வெளியேற்றம் 16 ஆயிரத்து 930 கன அடியாகவும் இருந்தது.

குடகு மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஹாரங்கி அணையும் நிரம்பியுள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ஹேமாவதி அணையும் நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள 4 அணைகளும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :