Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

By: vaithegi Tue, 28 Nov 2023 12:09:10 PM

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை
.. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனார். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எனவே இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அதிமுக அதிகாரப்பூர்வாமாக சென்றுள்ளது. இதற்கு இடையே, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

hearing,appeal,ops ,விசாரணை, மேல்முறையீட்டு மனு,ஓபிஎஸ்


இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் கவுதம் சிவசங்கர் கடந்த மாதம் 05ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோரின் அமர்வில் இன்று மேல்முறயீட்டு மனு விசாரணைக்கு வருகிறது.

Tags :
|