Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரைந்து விசாரிக்க வேண்டும்... தமிழக அரசு தாக்கல் செய்த முறையீடு

விரைந்து விசாரிக்க வேண்டும்... தமிழக அரசு தாக்கல் செய்த முறையீடு

By: Nagaraj Tue, 07 Nov 2023 10:15:31 PM

விரைந்து விசாரிக்க வேண்டும்... தமிழக அரசு தாக்கல் செய்த முறையீடு

சென்னை: ஆளுநர் ரவிக்கு எதிரான மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று புகார் கூறியுள்ளது.

மேலும் குறிப்பிட்ட காலம் வரம்புக்குள் மசோதாக்கள் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்க தாமதிப்பதால், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு கால வரம்பு நிர்ணயிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆளுநர் ரவிக்கு எதிராக கடந்த 30ம் தேதி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

tamil nadu government appeal,governor ravi ,தமிழ்நாடு அரசு முறையீடு ,ஆளுநர் ரவி, முறையீடு, வழக்கு

மேலும் குறிப்பிட்ட காலம் வரம்புக்குள் மசோதாக்கள் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்க தாமதிப்பதால், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு கால வரம்பு நிர்ணயிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆளுநர் ரவிக்கு எதிராக கடந்த 30ம் தேதி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :