ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
By: vaithegi Mon, 03 Apr 2023 09:58:29 AM
சென்னை மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை ... அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இருநீதிபதிகள் அமர்வு முன்பு முறையிட்டுள்ளது.
நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என்று இருதரப்பும் பதில் அளித்த நிலையில் இன்று விசாரிக்கப்படுகிறது. இந்த விசாரணை, இறுதி விசாரணையா?
அல்லது இடைக்கால நிவாரணமா? என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கின்றனர்.