Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

By: vaithegi Wed, 15 Nov 2023 09:40:46 AM

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை


சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம்தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அதிமுக அதிகாரப்பூர்வாமாக சென்றுள்ளது. இருந்த போதிலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வந்தார்.

இந்த சூழலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அதில், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் முறையீடு செய்துள்ளார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் முறையீடு செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு ஒப்புதல் அளித்தது.

hearing,o. panneerselvam,filing,appeal petition ,விசாரணை,ஓ.பன்னீர்செல்வம் ,தாக்கல் ,மேல்முறையீட்டு மனு

இச்சூழலில் அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்த மேல்முறையீட்டு மனு புதன்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நிதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.

இதையடுத்து மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் முறையீடு முறையீடு அன்று மனு தாக்கல் செய்யவில்லை, பிறகு எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி விசாரணை தேதியை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் அதிமுக பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Tags :
|