பிரேசிலில் ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்த தாக்குதல் கவலை அளிக்கிறது
By: Nagaraj Mon, 09 Jan 2023 11:43:57 PM
புதுடில்லி: ஆழ்ந்த கவலையளிக்கிறது... பிரேசிலில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது ஆழ்ந்த கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தல் தோல்வியை ஏற்க முடியாமல் காங்கிரஸ் கட்டிடம், உச்சநீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ட்விட்டரில் பிரேசிலில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் நாசவேலைகள் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags :