Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாரானதாக அருட்தந்தை கைது

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாரானதாக அருட்தந்தை கைது

By: Nagaraj Fri, 27 Nov 2020 9:15:16 PM

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாரானதாக அருட்தந்தை கைது

அருட்தந்தை கைது... மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், இவர் யாழ்ப்பாணம் சிறிய குருமட அதிபராவார்.

tamil people,tribute,lighting,archbishop arrested ,தமிழ் மக்கள், அஞ்சலி, விளக்கேற்றினர், அருட்தந்தை கைது

யாழ்ப்பாணம், ஆயர் இல்லத்துக்கு முன்பாக தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குத் தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் அரசியல் தலைவர்களும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Tags :