Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் கூட்டணி அரசை கவிழ்க்க முடியாததால் பா.ஜ.க. குழப்பத்தில் உள்ளது - சிவசேனா

மகாராஷ்டிராவில் கூட்டணி அரசை கவிழ்க்க முடியாததால் பா.ஜ.க. குழப்பத்தில் உள்ளது - சிவசேனா

By: Karunakaran Thu, 30 July 2020 11:27:06 AM

மகாராஷ்டிராவில் கூட்டணி அரசை கவிழ்க்க முடியாததால் பா.ஜ.க. குழப்பத்தில் உள்ளது - சிவசேனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றபோது, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிராவில் பா.ஜ.க. சொந்த பலத்தில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அதன்பின் மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி அளித்தபோது, சிவசேனாவுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தாலும், தேர்தலில் கூட்டணியாக போட்டியிட மாட்டோம் என்று தெரிவித்தார்.

இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவசேனாவுடன் கூட்டணி சேர எந்த திட்டமும் இல்லை என்று பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். பா.ஜ.க. தலைவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.

shiv sena,maharashtra,coalition government,bjp ,சிவசேனா, மகாராஷ்டிரா, கூட்டணி அரசு, பாஜக

இதுகுறித்து சாம்னாவின் தலையங்கத்தில், மகாராஷ்டிராவில் உங்கள் அரசியல் விளையாட்டை விளையாட முடியாது. எனவே மாநிலத்தில் உங்களது ஆட்சியை பற்றி ஆசைப்படவும் முடியாது. ஜே.பி.நட்டா மாநில பா.ஜ.க. சொந்த பலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். சில பா.ஜ.க. தலைவர்கள் சிவசேனாவை விமர்சிக்கும்போது, அந்த கட்சியுடன் சிவசேனா இணைவதன் மூலம் மாநிலத்திற்கு எவ்வாறு நன்மைகளை வழங்க முடியும்? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், சிவசேனா தலைமையிலான தற்போதைய மகா விகாஷ் அகாடி அரசாங்கம் இந்த மாநிலத்தின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தை குதிரை பேரம் மூலம் கவிழ்க்க முடியாது என்பதால் பா.ஜ.க. குழப்பம் அடைந்துள்ளதாக சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :