Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது; எல்.முருகன் தகவல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது; எல்.முருகன் தகவல்

By: Monisha Tue, 01 Sept 2020 2:28:54 PM

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது; எல்.முருகன் தகவல்

தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளதாக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பேரவையில் பாஜக உறுப்பினர்கள் கணிசமான அளவில் இருப்பர்.

கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை; பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும். சசிகலா சொத்து முடக்கத்தில் சட்டம் அதன் கடமையை செய்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

tamil nadu,assembly election,bjp,l murugan,case ,தமிழ்நாடு,சட்டமன்ற தேர்தல்,பாஜக,எல் முருகன்,வழக்குப்பதிவு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டம் கூடியதாக வழக்கு போட்டால் அத்தனை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்கு போட வேண்டியிருக்கும் என்று கூறினார்.

Tags :
|