Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலியாகி விடும் - நவாப் மாலிக் ஆவேசம்

நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலியாகி விடும் - நவாப் மாலிக் ஆவேசம்

By: Karunakaran Sat, 14 Nov 2020 5:51:30 PM

நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலியாகி விடும் - நவாப் மாலிக் ஆவேசம்

மராட்டியத்தில் சிவசேனா கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடனான கூட்டணியை பிரித்து கொண்டது. அதன்பிம், மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிர விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது.

இருப்பினும், முன்னாள் முதல் மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இந்த கூட்டணியில் பிளவு ஏற்படும் என கூறி வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பு நிர்வாகி மற்றும் மராட்டிய சிறுபான்மையோருக்கான மந்திரி நவாப் மாலிக் நேற்று பேசும்போது, எங்களுடைய கட்சியில் இணைவதற்கு சில பா.ஜ.க. தலைவர்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்று கூறினார்.

bjp,nawab malik,sivasena,maharastra ,பாஜக, நவாப் மாலிக், சிவ் சேனா, மகாராஷ்டிரா

மேலும் அவர், அதற்கான டிரெய்லர் வருகிற நாளில் வெளியிடப்படும். மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி முழு காலஅளவை நிறைவு செய்யும். நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலியாகி விடும். ஆனால் நாங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை என கூறினார்.

சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, பட்னாவிஸ் அரசில் இருந்து ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட விவகாரத்தினை தொடர்ந்து கட்சே தேசியவாத காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|