கங்கை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு... 34 பேரும் மீட்பு
By: Nagaraj Sun, 27 Nov 2022 4:04:31 PM
வாரணாசி: கங்கை ஆற்றில் கவிழ்ந்த படகு... உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை ஆற்றில் 34 பேருடன் சென்ற படகு இன்று காலை கவிழ்ந்தது.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கெடகாட் அருகே கங்கை நதியில் படகு கவிழ்ந்தது. படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டதாகவும், படகில் தண்ணீர் நிரம்பியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
படகில் இருந்த பயணிகள் அனைவரும் உயிருக்கு அலறி துடித்தனர். இதனையடுத்து உடனடியாக அப்பகுதியில் இருந்த உள்ளூர் மாலுமிகளுடன் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகில் இருந்த 34 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதில் பெண் உட்பட இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,
அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து
ஏசிபி அவதேஷ் குமார் பாண்டே கூறுகையில், இந்த விபத்தில் உயிர்ச்சேதம்
எதுவும் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
இரண்டு பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.