ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 3 பேரின் உடல்கள் சென்னை வந்து சேர்ந்தது
By: Nagaraj Fri, 21 Oct 2022 6:04:59 PM
சென்னை: 3 பேரின் உடல்கள் சென்னை வந்தது... கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் புனித யாத்திரை சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு விமானி, 6 யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இறந்த 7 பேரில் 3 பேர் தமிழ்நாடு, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த
பிரேம்குமார் (63), கலா (50), சுஜாதா (56) ஆவர். இதையடுத்து,
உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர உத்தரகாண்ட் மாநில அரசுடன்
இணைந்து தமிழக அரசு செயல்பட்டது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து
3 பேரின் உடல்களும் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை
விமான நிலையத்தில் 3 பேரின் உடலுக்கு தமிழக வெளிநாட்டு தமிழர் நலத்துறை
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.