Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

By: Nagaraj Sun, 01 Nov 2020 11:16:12 AM

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.... மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அமைச்சர் துரைக்கண்ணு அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டார்

அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

minister durakkannu,rajagiri,was taken away and killed ,அமைச்சர் துரைக்கண்ணு, ராஜகிரி, எடுத்து செல்லப்பட்டது, பலி

கடந்த சில தினங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.

முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தியதிற்கு பின் மறைந்த அமைச்சரின் உடல் அவருடைய சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு அருகே உள்ள ராஜகிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது அங்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், எம்.பி. வசந்தகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் உள்ளிட்டோர் ஏற்கனவே பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :