Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊழல் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டிய பிரேசில் அதிபர்

ஊழல் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டிய பிரேசில் அதிபர்

By: Karunakaran Tue, 25 Aug 2020 08:54:58 AM

ஊழல் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டிய பிரேசில் அதிபர்

சர்ச்சைகளுக்கு பெயர் போன அதிபராக உள்ள பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ, அதிபராக பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். கொரோனா விவகாரத்தில் அவரது மெத்தனமான அணுகுமுறை தான் பிரேசிலில் கொரோனா அதிகம் பரவ காரணமாக இருந்ததாக பல குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் தனது மனைவியின் மீதான ஊழல் புகார் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை போல்சனாரோ மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2011-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டுக்கு இடையில், ஜெயீர் போல்சனாரோவின் மனைவி, மிச்செல் போல்சனாரோவின் வங்கிக்கணக்கில் ஜெயீர் போல்சனாரோவின் நண்பரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான கியூரோஸ் என்பவர் பல மில்லியன் டாலர் டெபாசிட் செய்தது குறித்து குளோபோ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

brazilian president,punch,journalist,jair bolsonaro ,பிரேசில் ஜனாதிபதி, பஞ்ச், பத்திரிகையாளர், ஜெய்ர் போல்சனாரோ

மிச்செல் போல்சனாரோவின் வங்கிக்கணக்கில் பல மில்லியன் டாலர் டெபாசிட் செய்தது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைநகர் பிரேசிலியாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குளோபோ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் இருந்தார்.

குளோபோபத்திரிகையாளர் ஒருவர், பிரேசில் அதிபரிடம் அவரது மனைவியின் வங்கிக்கணக்குகள் குறித்த விவரத்தை கேள்வியாகக் கேட்டபோது, ஜெயீர் போல்சனாரோ கோபமடைந்து, உங்கள் முகத்தில் குத்த விரும்புகிறேன். அது சரிதானே? என்று கேட்டார். இதற்கு சக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெயீர் போல்சனாரோ பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாதியில் இருந்து வெளியேறினார்.

Tags :
|