- வீடு›
- செய்திகள்›
- டெல்லியில் முறையான சம்பளம் கேட்ட ஊழியருக்கு அழகு நிலைய உரிமையாளர் நிகழ்த்திய கொடூரம்
டெல்லியில் முறையான சம்பளம் கேட்ட ஊழியருக்கு அழகு நிலைய உரிமையாளர் நிகழ்த்திய கொடூரம்
By: Karunakaran Wed, 08 July 2020 2:56:27 PM
டெல்லியின் கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் உள்ளது. இதனை நிகிதா என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சப்னா என்பவர் பணிபுரிந்து வந்தார். ஜனவரி முதல் ஊரடங்கு தொடங்குவதற்கு முன் வேலை செய்ததற்கான ஊதியத்தை சப்னா கேட்டுள்ளார். ஆனால் நிகிதா சம்பளம் வழங்க மறுத்துவிட்டார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ஆத்திரமடைந்த நிகிதா தனது வளர்ப்பு நாயை விட்டு சப்னாவை கடிக்க வைத்துள்ளார். இதனால் சப்னாவை நாய் பயங்கரமாக கடித்துள்ளது. இதனால், சப்னாவின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும் அவரது 2 பற்களும் உடைந்தது.
இதனால் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஜுன் 11-ல் டெல்லி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். ஆனால், போலீசார் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நிகிதா தலைமறைவாகிவிட்டார்.
தற்போது இந்த சம்பவம் குறித்து சில தன்னார்வ அமைப்புகள் அழுத்தம் கொடுத்தது. இதனால் 20 நாட்கள் கழித்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நிகிதா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது