Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி துவங்கும்

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி துவங்கும்

By: vaithegi Tue, 28 Feb 2023 11:37:07 AM

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி துவங்கும்

சென்னை: தமிழகத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. எனவே அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதியன்று துவங்கும்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது 3 ஆவது பட்ஜெட் அறிக்கையை சமர்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு தெரிவித்ததாவது,

conference,budget ,கூட்டத்தொடர் ,பட்ஜெட்

‘தமிழகத்தில் 2023-34 -ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20-ம் தேதியன்று தாக்கல் செய்வார்.இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

மேலும் பேரவையின் போது யார் எங்கு அமருவார்கள் என்பது குறித்து சபாநாயகர் முடிவு செய்வார்’ என்று கூறியுள்ளார். இதன் இடையில், இந்தாண்டு பட்ஜெட்டில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Tags :