Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈபிஎஸ்-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஈபிஎஸ்-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

By: vaithegi Tue, 06 June 2023 10:32:34 AM

ஈபிஎஸ்-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து, பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாக சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி மனுவில் உண்மை தன்மை இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து அதன்படி விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிச்சாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், உரிய ஆவணங்களையும் திரட்டி வந்தனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்து உள்ளனர்.

hearing,chennai high court,eps ,விசாரணை,சென்னை உயர்நீதிமன்றம்,ஈபிஎஸ்

அதிலும் குறிப்பாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்ட உ ள்ளார். இந்த வழக்கில் புகார்தாரர் அளித்த தகவலின் அடிப்படையில் சாட்சியாக ஓ. பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார். புகார் அளித்த 1338 பக்க ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது வேட்புமனுவில், தவறான தகவல் அளித்ததாக ஈபிஎஸ்-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தேனியை சேர்ந்த மிலானி என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு தாக்கல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :