Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

By: vaithegi Tue, 22 Aug 2023 11:26:12 AM

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 3 பேர் ஆஜராகவில்லை.

செம்மண் குவாரி வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட கோபிநாத், ஜெயசந்திரன் உள்ளிட்ட 4 பேர் ஆஜராகியிருந்தனர். இதனால் வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

investigation,minister ponmudi,court ,விசாரணை,அமைச்சர் பொன்முடி , நீதிமன்றம்


இதற்கு இடையே, விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதாவது, 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதியப்பட்டது.

எனவே அதன்படி, அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இதில், லோகநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு வருகிறது.

Tags :